வங்கக் கடலில் சூறைக்காற்று வீசுவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறுஉத்தரவு வரும் வரை மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளத்துறை தடை விதித்துள்ளது.
இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
