இம்முகாம்களில் பங்கேற்க சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களும் செல்கின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக அலுவலகம் பூட்டியே உள்ளது. இதன்காரணமாக, மக்கள் பயன்பெறும் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக வருவோர் ஏமாற்றமடைகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
