இவர்கள் மீது கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு தாமதமாகவே ஹை கோர்ட் உத்தரவின் பெயரில் கோவை
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பின்னர் தனி அறை ஏற்படுத்தப்பட்டு குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில் அறை கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக சாட்சியங்கள் பெறப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நந்தினி தேவி மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறினர்.
இதற்கிடையில் தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் அதில் நீதிபதி நந்தினி தேவியும் ஒருவர். இருப்பினும் மறு உத்தரவு வரும் வரை அந்த நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று கூறப்பட்டதால் கோவை நீதிமன்றத்தில்தான் நந்தினி தேவி பணியாற்றுகிறார். இன்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கும் நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்
படுத்தப்பட்டனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது. இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்த பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது குற்றவாளிகள் அழித்த ஆதாரங்கள் அனைத்தும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரும்குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதோடு பாதிக்கப்பட்ட பெண்களும் சிபிஐ அதிகாரிகளிடம் உண்மையைத் துணிச்சலாக கூறினர். அரசு தரப்பில் 48 சாட்சியங்களிடம் விசாரணை நடத்திய நிலையில் யாரும் பிற சாட்சியாக மாறவில்லை. இதன் காரணமாக குற்றம் முழுமையாக நிரூபிக்கப்பட்டு அனைவரும் குற்றவாளிகள் என்பது நிரூபனமானது.
இதைத்தொடர்ந்து இன்று நண்பகல் 12 மணிக்கு தண்டனை விபரங்கள்
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் நீதிபதி நந்தினி தேவி அவர்கள் சாகும்வரை ஆயுள் தண்டனையும் பாதிக்ப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பானது உலகம் முழுவதும் உள்ள மக்களால் மிகுந்த வரவேற்புக்கு ஆளாகியுள்ளது.
மோசமான குற்ற வழக்குகளுக்கு இது போன்ற கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டால் மட்டுமே தவறுகளை குறைக்க முடியும்.
மேலும் அரபு நாடுகளைப் போல் இவர்களை சிறையில் வைத்து சோறு போடுவதை விட இதுபோன்ற குற்றத்திற்கு அதிகபட்ச மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு..
நன்றி தொண்டிநியூஸ்
