ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளி கல்வி துறை தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாய தேர்ச்சி அடையும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், எழுத, படிக்க தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முன்னேறுகின்றனர். எனவே ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தால் பெரும்பாலான மாணவ மாணவியர்கள் தங்களுடைய கல்வியை இடைநிறுத்தம் செய்யும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கற்றல் திறனை ஒழிப்பதற்காக கொண்டுவந்துள்ள இந்த பாஜக அரசின் திட்டத்தால் சாமானிய மக்களின் கல்லூரிமை மாணவ மாணவிகளுக்கான மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் மாணவ மாணவிகளின் மனதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில், பொது தேர்வு வைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைப்பது எனவும், தேர்ச்சி, தோல்வியை தற்போது முடிவு செய்ய வேண்டாம். விடைத்தாள் திருத்தும் பணி வட்டார வளமையத்தில் மேற்கொள்ள வேண்டும். ஐந்து, எட்டாம் வகுப்புக்குரிய இறுதி தேர்வு வினாத்தாள்கள் மாவட்ட வாரியாக அச்சிட வேண்டாம். மாநில வாரியாக அனுப்பப்படும். 20 மாணவர்களுக்கு கீழ் இருந்தால், அவர்களை அருகில் உள்ள பள்ளியில் தேர்வெழுத முயற்சி மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். தேர்வன்று இந்த மாணவர்களை அருகில் உள்ள மையங்களுக்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. போதுமான அவகாசம் இல்லை, என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
சர்வாதிகாரப் போக்கில் செயல்படும் ஒன்றியரசு
மாநில அரசின் உரிமைகளை மறப்பதும், தொடர்ந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான சர்வாதிகாரப் போக்கை கடைபிடிப்பதும், தற்போதைய மோடி அரசின் செயல்திட்டமாக இருந்து கொண்டு இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே கட்சி தான் ஆட்சியில் அமர வேண்டும் என்றும் அந்தக் கட்சி பாஜக வாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்றும் தற்போதைய தேர்தல் நடைமுறை சட்டங்களை மாற்றி அமைத்து ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ள பாஜக இதன் மூலம் திட்டமிட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் சாமானிய ஏழை எளிய பாட்டாளி மக்கள் கல்வி பயில்வது என்பது ஏழைகளுக்கு எட்டா கனியாகி விடும் என்பதில் மத்திய அரசு தங்களுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி வருகிறது.
@thondinews
